'என் சமாதியில் இப்படி எழுதுங்கள்': சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!

அமைச்சர் துரைமுருகன்
அமைச்சர் துரைமுருகன்'என் சமாதியில் இப்படி எழுதுங்கள்': சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் உருக்கம்!

’’என்றைக்காவது ஒரு நாள் மறையப் போகிறவன், அதனால் எனது சமாதியில் ’கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான், என்று எழுதினால் போதும்' ’’ என சட்டப்பேரவையில் தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உருக்கமாக பேசியுள்ளார்.

தமிழகச் சட்டப்பேரவையில் நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் பங்கேற்று பேசுகையில், ‘’ எதிர்கட்சி உறுப்பினர்கள் என் மீது காட்டும் மரியாதைக்கு நான் என்றைக்கும் கடமைப்பட்டவன். நீர்வளத்துறைத்தான் வேண்டுமென முதலமைச்சரிடம் நான் தான் கேட்டுப் பெற்றேன்.

கட்சியில் நீண்டகாலமாக இருந்துவிட்டேன், இருக்கப் போகிறேன். ஆனால், என்றைக்காவது ஒரு நாள் நான் மறையப் போகிறவன், அன்று என் சமாதியில் ஒரு வரி எழுதினால் போதும். ’கோபாலபுரத்து விசுவாசி இங்கே உறங்குகிறான்’ என்று எழுதினால் போதும்.

நூறாண்டுகள் நிச்சயம் இருப்பேன். ஆளுநரை சந்தித்தப் போது கூட கேட்டார். உங்களுடைய வயது என்ன என்று, நான் கூறினேன் என் தலைவன் கலைஞருடன் இருந்தேன், தற்போது அவரது மகன் ஸ்டாலினுடன் இருக்கிறேன். நாளை உதயாவுடனும், அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் அவருடனும் இருப்பேன் என்று கூறினேன்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in