`ஜெயலலிதா சிறை செல்வதற்கு இவர்தான் காரணம்’- யாரைச் சொல்கிறார் சி.வி.சண்முகம்

`ஜெயலலிதா சிறை செல்வதற்கு இவர்தான் காரணம்’- யாரைச் சொல்கிறார் சி.வி.சண்முகம்

ஜெயலலிதா சிறை செல்வதற்குக் காரணமே டி.டி.வி.தினகரன் தான் எனவும், அவரை பற்றிப் பேச டி.டி.வி.தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “சொத்துக் குவிப்பு வழக்கில் டி.டி.வி.தினகரனால் தான் ஜெயலலிதா சிறைக்குச் சென்றார். அதனால் தான் டி.டி.வி.தினகரனை வீட்டைவிட்டு ஜெயலலிதா துரத்தியடித்தார். ஜெயலலிதாவிற்குத் துரோகம் செய்தவர்தான் டி.டி.வி.தினகரன். அவர் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டிய அவசியம் இல்லை.

டி.டி.வி.தினகரனை நம்பி சென்ற 18 சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று அனாதையாக உள்ளனர். அவரை நம்பியவர்கள் தான் இன்று ஏமாந்து போயிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி 4 ஆண்டு காலம் சிறப்பான ஆட்சியைத் தந்துள்ளார். அதிமுக கட்சியைக் காப்பாற்றினார். 75 உறுப்பினர்களைப் பெற்று சாதனை பெற்று இருக்கிறார். தினகரன் நடத்துவது கட்சி அல்ல, கோஷ்டி” எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in