சசிகலா மெளனமாக இருப்பது ஏன்? - டிடிவி தினகரன் சொன்ன பதில்!

தினகரன்
தினகரன்

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் மதுரை நாகமலை புதுக்கோட்டைப் பகுதியில் நடைபெற்ற அமமுக நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் இன்று கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தொடர்ந்து செய்தியாளர்களையும் டிடிவி தினகரன் சந்தித்தார்.

செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியதாவது, “பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில் ஊழல் நடைபெறுவதாக தகவல் வந்தவண்ணம் உள்ளது. இது திமுக என்றாலே ஊழல் என்பதைக் காட்டுகிறது. போடாத சாலைகளுக்குக் கூட பணம் பெற்றுக்கொண்டு போட்டதாகக் கணக்குக் காட்டுகிறார்கள். கூட்டணி பலம் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்பு அவருடன் அதிகாரம், பணத்தை நம்பியே சிலர் நின்றனர். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் அமமுக ஏன் தொடங்கப்பட்டது எனத் தொண்டர்களுக்குப் புரிய வைத்துள்ளனர்.

நீதிமன்றத்தின் மூலம் அதிமுக செயல்படாமல் இருக்கவும் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ்சே காரணம். ஜல்லிக்கட்டு விசயத்தில் தமிழக அரசு சரியான முறையைக் கையாண்டு தமிழர்களின் உணர்வுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்.”என்றார். சசிகலா மெளனமாகவே இருக்கிறாரே ஏன்? என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு டிடிவி தினகரன், ‘இதை நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும்” என முடித்துக்கொண்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in