மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன?- மின்வாரியத்துக்கு அன்புமணி கேள்வி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்புமின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன?- மின்வாரியத்துக்கு அன்புமணி கேள்வி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்திருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்றும் மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன? என்றும் பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைப்பதில் பெரும் குழப்பங்கள் நிகழ்ந்திருப்பதாகவும், மின் இணைப்பு எண்களுடன் எந்த வகையிலும் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. எந்த ஒரு சீர்திருத்தத்திற்கும் முறையான திட்டமிடலும், காலக்கெடுவும் தேவையாகும். போதிய காலக்கெடு வழங்காமல், நோக்கம் என்ன? என்பதை தெரிவிக்காமல் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் திட்டத்தை மக்கள் மீது திணித்ததன் விளைவு தான் இதுவாகும்.

அன்புமணி
அன்புமணி

மின் இணைப்பு எண்களுடன் ஆதாரை இணைப்பதில் எத்தகைய குழப்பங்கள் நடந்துள்ளன? அதற்கான காரணங்கள் என்ன? அதனால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படக்கூடும்? அதை மின்வாரியம் எவ்வாறு சரி செய்யப்போகிறது? என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க வேண்டும். மின் இணைப்பு எண் - ஆதார் இணைப்புக்கான நோக்கம் என்ன? என்பதை இப்போதாவது மின்வாரியம் தெரிவிக்க வேண்டும். வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர்களை அனுப்பி ஆதார் மற்றும் மின் இணைப்பு எண்களைப் பெற்று அவற்றை இணைப்பதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in