தனது எதிர்காலம் என்னவாகும்?: பொதுக்குழு களேபரத்துக்குப் பின் முதன்முறையாக மனம் திறந்த ஓபிஎஸ்

ஓ.பன்னீர் செல்வம்.
ஓ.பன்னீர் செல்வம்.

அதிமுக பொதுக்குழுவுக்குப் பின்னர் முதன் முதலாக இன்று செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் சொன்னார் ஓ.பன்னீர் செல்வம். அதில் தனது எதிர்காலம் என்னவாகும்? என்னும் கேள்வியையும் எதிர்கொண்டார் ஓ.பன்னீர் செல்வம்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி கொடுத்த ஓ.பன்னீர் செல்வம், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்சியை ஆட்சிக்கட்டிலில் வைத்திருந்தனர். கட்சியில் இன்று இருக்கிற அசாதாரண சூழல் யாரால் ஏற்பட்டது, யார் சதிவலை பின்னினார்கள் என எனக்கு மிக நன்றாகவே தெரியும். அது விரைவில் மக்களுக்கும் தெரியவரும். அவர்களுக்குத் தண்டனைக் கொடுக்கும் வகையில் மக்களே நல்ல தீர்ப்பைக் கொடுப்பார்கள்.

பன்னீர் செல்வம் போன்ற தொண்டர்களைப் பெற்றது என் பாக்கியம் என ஜெயலலிதாவிடம் நற்சான்று பெற்றவன் நான். எனது எதிர்காலத்தை அதிமுக தொண்டர்களும், தமிழக மக்களும் தீர்மானிப்பார்கள். ”என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in