சுரங்கப்பாதை வழியே தப்பிச்சென்ற கோத்தபய எவற்றை எடுத்துச் சென்றார்?: அதிர வைக்கும் கடற்படை வீரர்!

சுரங்கப்பாதை வழியே தப்பிச்சென்ற கோத்தபய எவற்றை எடுத்துச் சென்றார்?: அதிர வைக்கும் கடற்படை வீரர்!

இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் போது முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச நான்கு பைகளுடன் சுரங்கப்பாதை வழியாக தப்பிச் சென்றதாக கப்பற்படை வீரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பொருளாதாரச் சீரழிவுக்குக் காரணமான கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி கடந்த 9-ம் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் புகுந்ததால் அங்கிருந்து கோத்தபய ராஜபக்ச தப்பிச் சென்று விட்டார்.

தற்போது அந்த மாளிகையில் பணிபுரிந்த கடற்படை வீரர், கோத்தபய ராஜபக்ச தப்பியோடிய தகவலை தற்போது வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ 9-ம் தேதி மக்கள் நடத்திய போராட்டம் பெரிதாக இருக்கும் என்று கோத்தபய ராஜபக்ச நினைக்கவில்லை. அவர்களை ராணுவவீரர்கள் சமாளித்து விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால், நிலைமை வேறு விதமாக இருந்தது. போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையின் வாசலை உடைத்துக் கொண்டு உள்ளே வந்தனர். இதன் காரணமாகவே கோத்தபய ராஜபக்ச மாளிகையில் இருந்து வெளியேறினார். கைகளில் சிக்கிய நான்கு பைகளுடன் மாளிகையில் இருந்து அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை வழியாக கொழும்பு துறைமுகம் சென்றடைந்தார். அங்கிருந்த கப்பல் மூலம் அவர் தப்பிச் சென்று விட்டார்” என கடற்படை வீரர் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in