இளைஞர்களின் உணர்வுகளையும், தியாகத்தையும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வியாபாரமாக பயன்படுத்துகிறார். மகன் உயிரிழந்த பிறகு எங்கள் குடும்பத்திற்கு எந்த உதவியும் சீமான் செய்யவில்லை என்று காவிரி விவகாரம் தொடர்பாக தீக்குளித்து இறந்த விக்னேஷின் தாயார் செண்பக லட்சுமி குற்றச்சாட்டியுள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில், காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கடந்த 2016 ஆம் ஆண்டு (16.09.2016) தீக்குளித்து இறந்த விக்னேஷின் அம்மா செண்பகலெட்சுமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "காவிரி விவகாரம் தொடர்பாக உயிரிழந்த விக்னேஷின் நினைவு நாளை காவிரி எழுச்சி நாளாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். விக்னேஷின் உயிர் தியாகத்தை வைத்து சீமான் பணம் சம்பாதிக்கிறார். விக்னேஷுக்கு நினைவு மண்டபம் கட்ட வெளிநாட்டில் பணம் வாங்கி செலவு செய்து விட்டார். அதில் ஒரு ரூபாயை கூட எங்கள் குடும்பத்தினருக்கு தரவில்லை.
எங்கள் குடும்பத்திற்கு நிறைய உதவி செய்தது போலவும், எனது கண் அறுவை சிகிச்சைக்கு பணம் கொடுத்தது போலவும் நாம் தமிழர் கட்சியினர் பொய்யான தகவல்களை பரப்பி வருகின்றனர். கண் அறுவை சிகிச்சைக்கு சீமான் என்னை எந்த மருத்துவமனைக்கும் அழைத்து செல்வில்லை. நாங்கள் அவர்களுடன் செல்லவில்லை. நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் எங்களுக்கு நகை கொடுத்தது போல சமூக வலைத்தளங்களில் பதிவு செய்கிறார்கள். அவர்களால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. நாம் தமிழர் கட்சியினர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். விக்னேஷ் மரணத்தை சீமான் வியாபாரம் ஆக்கி விட்டார். இளைஞர்களின் உணர்வுகளையும் தியாகத்தையும் சீமான் வியாபாரம் ஆக்கிவிட்டார்" என்று அவர் தெரிவித்தார்.
இதையும் வாசிக்கலாமே...
தேர்வு எழுத அனுமதி மறுப்பு... ஐந்தாவது மாடியில் இருந்து குதித்து பொறியியல் மாணவர் தற்கொலை!
பாடகி சுசித்ராவுக்கு முன்னாள் கணவர் கொடுத்த ரியாக்ஷன்... வைரலாகும் வீடியோ!
ஒவ்வொரு தனி மனிதரின் நியாயமான உணர்வுக்கும் மதிப்பளியுங்கள்... ஜி.வி.பிரகாஷ் உருக்கம்!
ஷாக்... இந்து இளைஞரை திருமணம் செய்த முஸ்லிம் பெண் மீது கொலைவெறி தாக்குதல்!
டெல்லி, ராஜஸ்தானைத் தொடர்ந்து கான்பூரிலும் அதிர்ச்சி... 10 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!