`நீங்கள் பதவி விலகிவிட்டு ஆர்.எஸ்.எஸ் பணியை மேற்கொள்ளுங்கள்'- ஆளுநரை சாடும் திருமாவளவன்

`நீங்கள் பதவி விலகிவிட்டு ஆர்.எஸ்.எஸ் பணியை மேற்கொள்ளுங்கள்'- ஆளுநரை சாடும் திருமாவளவன்

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவியா என சொல்லக்கூடிய வகையில் அவரது செயல்பாடு உள்ளதாக திருமாவளவன் மதுரையில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூர் அடுத்த தும்பைபட்டியில் தியாக சீலர் கக்கனின் 114- வது பிறந்தநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கக்கன் மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அக்னிபத் திட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறேன். 10 கோடி பேருக்கு வேலை வழங்குவேன் எனக் கூறிய ஒன்றிய அரசு இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறித்துள்ளது" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இஸ்லாமியர்களின் வீடு சேதப்படுத்தப்படுவதை கண்டித்து வரும் 22-ம் தேதி தனது தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்றார்.

மேலும், "தமிழக ஆளுநர் முழுநேர ஆர்.எஸ்.எஸ்காரர் போல, ஆளுநர் ஆர்.என் ரவியா அல்லது ஆர்.எஸ்.எஸ் ரவியா? என சொல்லக்கூடிய வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்திருக்கின்றது. அவர் தனது பதவியில் இருந்து விலகிவிட்டு ஆர்.எஸ்.எஸ் பணியை மேற்கொள்ளலாம். மேலும் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது ஒற்றுமையை சீர்குலைக்கும் நாட்டின் பன்முக தன்மைக்கு இது எதிரானது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in