'பிரச்சினைக்கு காரணம் அந்த 600 பேர்தான்;ஜூலை 11ல் பொதுக்குழு நடைபெறாது' - வைத்திலிங்கம் திட்டவட்டம்!

'பிரச்சினைக்கு காரணம் அந்த 600 பேர்தான்;ஜூலை 11ல் பொதுக்குழு நடைபெறாது' - வைத்திலிங்கம் திட்டவட்டம்!

பொதுக்குழுவில் இல்லாத 600 பேரை மேடைக்கு முன்னால் அமர வைத்ததே அன்றைய பிரச்சினைக்குக் காரணமென்றும், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறாது என்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஒற்றை தலைமை விவகாரத்தால் கடந்த 23ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் களேபரத்தில் முடிந்தது. இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், ஈபிஎஸ் என இரு தரப்பிலும் பொதுக்குழு அதிகாரம் பற்றி பொதுவெளியில் பேசி வருகிறார்கள். பொதுக்குழு நடைபெற்றது செல்லாது என வைத்திலிங்கம் தெரிவித்திருந்த நிலையில், ஓபிஎஸ், ஈபிஎஸ் பதவிகள் காலாவதியாகிவிட்டது என சி.வி சண்முகம் தெரிவித்திருந்தார். ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவரும் தங்களது அதிகாரத்தை தனித்தனியாகக் கையில் எடுத்துள்ளதால், ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடைபெறுமா என்ற சந்தேகம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தஞ்சையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், “தொண்டர்களுக்கு மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஓபிஎஸ் அவர்களின் செல்வாக்கு கூடிக்கொண்டே போகிறது. பொதுக்குழு நடைபெறும் நாளன்று 6 மணிக்கு முன்னதாகவே பொதுக்குழுவில் இல்லாத 600 பேரை மேடைக்கு முன்னால் அமர வைத்துவிட்டார்கள். அவர்கள்தான் கூச்சல் போட்டார்கள். அவர்கள் அழைத்து வந்த உறுப்பினர்களைக் கொண்டு கடமை கட்டுப்பாடு கண்ணியம் என எதுவும் இல்லாத பொதுக்குழுவை நடத்தினார்கள். நீதிமன்றம் சொன்ன அறிவுரையைக் கேட்காமல் தீர்மானம் கொண்டுவந்தது தவறு. ஈபிஎஸ் பக்கம் சென்றவர்கள் திரும்பவும் ஓபிஎஸ் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். 11ம் தேதி பொதுக்குழு நடைபெறாது.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in