"முள்மரம் முளைவிடும்போதே கிள்ளப்பட வேண்டும்" - தமிழக சூழல் குறித்து வைரமுத்து பரபரப்பு ட்வீட்!

வைரமுத்து
வைரமுத்துதி இந்து

தமிழத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல் குறித்து கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் தனது கருத்தினை பதிவிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ சீராகச் செல்லும் தமிழ்நாட்டரசின் பயணத்துக்கு

ஊறுசெய்யும் யாரையும் சட்டமோ சமூகமோ மன்னிக்காது

புகை அடங்குமுன் பகை அடக்க வேண்டும். "முள்மரம் முளைவிடும்போதே கிள்ளப்பட வேண்டும்" என்றார் வள்ளுவர். காவல் துறையோர்

வள்ளுவர் வழியில் செல்லுவர்” என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக காவல்துறையும் தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. இதற்காக தமிழக அரசியல் கட்சியினரும் தங்களின் கவலையை தெரிவித்திருந்தனர். இந்த பதற்றமான அரசியல் சூழ்நிலை குறித்து நேற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in