மோடிக்கு மட்டும் அனுமதி... எங்களுக்கு கிடையாதா? தேர்தல் ஆணையத்துக்கு உத்தவ் தாக்கரே கேள்வி!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

கடவுளின் பெயரைச் சொல்லி வாக்கு கேட்க பிரதமர் மோடிக்கு மட்டும் அனுமதியளிக்கும் தேர்தல் ஆணையம், எங்களை கடவுள் பெயரை சொல்லக்கூடாது என்று கேள்வி கேட்பதை ஏற்க மாட்டோம் என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ்  தாக்கரேவின் சிவசேனா  கட்சிக்கு  'தீப்பந்தம்' சின்னம் வழங்கப்பட்டுள்ளது. இந்த சின்னத்தை விளம்பரப்படுத்தும் வகையில் சமீபத்தில்  சிவசேனா கட்சி (உத்தவ் தாக்கரே பிரிவு) பிரசாரப் பாடல் ஒன்றை வெளியிட்டது. அந்த பாடலில் 'இந்து', 'ஜெய் பவானி' போன்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே கட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதற்கு கட்சியின் தேர்தல் பாடலில் இருந்து ‘இந்து’, ‘ஜெய் பவானி’ வார்த்தைகளை நீக்க முடியாது என  உத்தவ் தாக்கரே பதில் அனுப்பி உள்ளார்.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

"இந்து,  'ஜெய் பவானி' போன்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என கூறுவது மராட்டியத்தை அவமதிப்பது ஆகும். அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். எங்கள் கூட்டங்களில் தொடர்ந்து 'ஜெய் பவானி', 'ஜெய் சிவாஜி' முழக்கங்கள் இடம்பெறும்.  தேர்தல் ஆணையம் எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், பிரதமர் மோடி கர்நாடகாவில் மக்களை 'ஜெய் பஜ்ரங்பலி' என கூறி வாக்குப்பதிவு எந்திரத்தை அழுத்துங்கள் என கூறியதற்கு எடுத்த நடவடிக்கை பற்றி எங்களிடம் கூற வேண்டும். 

இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு விட்டதா? என தேர்தல் ஆணையம் கூற வேண்டும். கடவுளின் பெயரை கூறி ஓட்டு கேட்பது சரியா? இதுதொடர்பாக நாங்கள் அனுப்பிய கடிதங்களுக்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தால் இனிமேல் நாங்களும் எங்கள் கூட்டங்களில் ஹர ஹர மகாதேவ் என கூறுவோம்" என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தவ் தாக்கரே பதில் அளித்துள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in