`துரோக சிந்தனை உடைய கும்பல் எடப்பாடி பழனிசாமி'- டி.டி.வி.தினகரன் காட்டம்

`துரோக சிந்தனை உடைய கும்பல் எடப்பாடி பழனிசாமி'- டி.டி.வி.தினகரன் காட்டம்

"சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது" என்று எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்துள்ளார் டி.டி.வி.தினகரன்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். "எடப்பாடி பழனிசாமியும் நானும் சிறப்பாக அதிமுக சட்ட விதிகளின்படி பணிகளை நிறைவாக ஆற்றினோம். அவரிடமும், எங்களிடமும் எவ்வித குறைபாடும் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். சசிகலாவும், தினகரனும் கூட எங்களோடு இணைய வேண்டும் என நினைக்கிறேன்" என்று கூறியிருந்தார் ஓபிஎஸ்.

இதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, "ஓபிஎஸ்சுக்கு உழைப்பு கிடையாது. மற்றவர்களைப் பற்றி அவருக்குக் கவலை இல்லை. பொதுக்குழு நடைபெறும் நேரத்தில் ரவுடிகளை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று கலவரத்தை ஏற்படுத்தினார். கட்சித் தலைமை பொறுப்பில் இருக்கும் இவரே இப்படிச் செயல்படுகிறார். இப்படி இருக்க அவரோடு எப்படி ஒத்துப் போக முடியும்" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், "தீயசக்தியான தி.மு.க.வை வீழ்த்துவதற்கு அம்மாவின் தொண்டர்கள் அனைவரும் இணக்கத்துடன் செயல்படவேண்டும் என்ற ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்தை சுயநலமற்ற, ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள எவர் ஒருவரும் வரவேற்கவே செய்வார்கள். அதேசமயம், சுயநலத்தின் உச்சமாக, பதவி வெறிபிடித்தாடும், துரோக சிந்தனை உடைய ஒரு கும்பல் நல்லதை எப்போதும் ஏற்காது என்பதும் அனைவரும் அறிந்ததே" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in