`வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை திமுக காக்கும்'

முதல்வராக அண்ணா பதவியேற்ற நாளான இன்று ஸ்டாலின் சபதம்
`வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை திமுக காக்கும்'

"கலைஞர் காட்டிய வழியில் தி.மு.க வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும்" என்று முதல்வராக அண்ணா பதவியேற்ற நாளான இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சபதம் எடுத்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், "தமிழர் தலைமுறை தழைக்கத் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முதலில் ஆட்சியமைத்த நாள் இன்று!. எத்தனை சோதனைகள், அடக்குமுறைகள், அவதூறுகள்! அத்தனையும் கடந்து தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு எத்தனை எத்தனை சாதனைகள்!

இனப் பகைவரும் அவர்தம் கைக்கூலிகளும் ஆயிரம் அரிதாரம் பூசி வந்தாலும், அவர்களுக்கே உரிய பொய்யும் புரட்டும் வன்மமும் கலந்து வசை மாரி பொழிந்தாலும், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் காட்டிய வழியில் தி.மு.கழகம் வாளும் கேடயமுமாகத் தமிழ் நிலத்தை என்றும் காக்கும்!" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in