‘இது அவரது கனவு’ - மணீஷ் சிசோடியாவுக்காக கண்ணீர் சிந்திய அர்விந்த் கேஜ்ரிவால்!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்"இது அவரது கனவு" - மணீஷ் சிசோடியாவுக்காக கண்ணீர் சிந்திய அர்விந்த் கேஜ்ரிவால்!

டெல்லியில் ஒரு புதிய பள்ளி திறப்பு விழாவின் போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்காக முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கண்ணீர் விட்டு அழுதார்.

டெல்லியில் நடந்த புதிய அரசுப்பள்ளியின் திறப்பு விழாவில் கண்ணீரைத் துடைத்தபடி பேசிய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், "மணீஷ் இதைத் தொடங்கினார். ஒவ்வொரு குழந்தையும் சிறந்த கல்வியைப் பெற வேண்டும் என்பது அவரது கனவாக இருந்தது. அவர் குழந்தைகளின் கல்விக்காக நல்ல பள்ளிகளை உருவாக்கி சரியானதை உறுதி செய்ததால், இப்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்

பாரதிய ஜனதா கட்சியை மறைமுகமாகத் தாக்கிய கேஜ்ரிவால், "கல்வியில் டெல்லியின் புரட்சியை முடிக்க அவர்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அதை நடக்க விட மாட்டோம்" என்று கூறினார். டெல்லி மதுபான ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியா பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in