உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் பார்வை மாறிவிட்டது!

பட்ஜெட் குறித்து பாஜகவிடம் விளக்கிய பிரதமர் மோடி
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

"இந்த பட்ஜெட் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட். உலக நாடுகள் இந்தியாவை பார்க்கும் பார்வை மாறிவிட்டது" என்று பாஜகவினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று பாஜகவினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, "மத்திய பட்ஜெட் ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்களை கருத்தில் கொண்டும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது; அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதில் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் ஏதாவது ஒரு பகுதி அல்லது மாவட்டம் ஏழ்மையில் இருப்பது சரியானது அல்ல; பா.ஜ.க. இளைஞர்களின் கனவுகளை அறிந்த கட்சி, அது இந்த பட்ஜெட்டில் பிரதிபலித்துள்ளது. தற்சார்பு என்ற அடித்தளத்தில் வருங்கால இந்தியா மிளிர வேண்டும்; இந்த பட்ஜெட் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான பட்ஜெட்.

கடந்த ஏழு அல்லது எட்டு ஆண்டுகளில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 1 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆனால் இன்று அது ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் கோடியாக உள்ளது. நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கூட 200 பில்லியன் டாலரில் இருந்து 630 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இவை அனைத்திற்கும் எங்கள் அரசின் பயனுள்ள கொள்கைகளே காரணம்.

2013-14ஆம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று ஏற்றுமதி 4 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக உள்ளது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவில் 275 பில்லியன் அந்நியச் செலாவணி கையிருப்பு இருந்தது. இன்று அந்நியச் செலாவணி கையிருப்பு 630 பில்லியன் ஆகும். இந்த கரோனா காலங்களில் கூட, இந்தியா அதன் பொருளாதார ஸ்திரத்தன்மையால் உலகின் கவனத்தை ஈர்க்க முடிந்தது. கடந்த 7 ஆண்டுகளில் விளையாட்டுக்கான பட்ஜெட் 3 மடங்கு உயர்ந்துள்ளது. விவசாயிகள் குடும்பத்து இளைஞர்களே விளையாட்டில் தேசத்தையே பெருமைப்படுத்துகிறார்கள். உலக நாடுகள் நமது இந்தியாவை பார்க்கும் பார்வை மாறிவிட்டது. அடுத்து நாம் காணவிருக்கும் உலகம் கரோனா காலத்திற்கு முன் இருந்ததுபோல் இருக்காது. பட்ஜெட் ஆவணங்கள் பெரிய அளவில் இருப்பதால் முழுதாக பட்ஜெட் உரையில் இடம்பெறவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட முடிவுகளால் இந்தியாவின் பொருளாதாரம் விரிவடைந்துள்ளது" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in