
ரூ.750 கோடி வங்கி மோசடி வழக்கில் உத்தர பிரதேச முன்னாள் எம்.எல்.ஏவின் ரூ.72 கோடி சொத்துக்களை அதிரடியாக அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஹரிசங்கர் திவாரியின் மகன் வினய் திவாரி. இவர் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சில்லுபார் தொகுதியில் எம்எல்ஏவாக கடந்த 2017ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் அவர் இணைந்தார். வினய்திவாரி மற்றும் இவரது குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் கங்கோத்ரி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் ரூ.1129 கோடி கடன் வாங்கியதில் ரூ.754.24 கோடி வங்கிக்கு இழப்பீடு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது.
இதன் அடிப்படையில் வினய் சங்கர் திவாரி மற்றும் அவரது குடும்பத்தினரின் மீது மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
விசாரணையில் தவறு நடந்திருப்பது உறுதியானது. அதையடுத்து ரூ.72 கோடி மதிப்புள்ள அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்துள்ளதாக அமலாக்க இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
HBD Nayanthara | சின்னத்திரை தொகுப்பாளர் டூ லேடி சூப்பர் ஸ்டார்! டயானா... நயன்தாராவாக மாறிய கதை!
சோகம்… பேருந்தில் இருந்து தவறி விழுந்த மாணவனின் கால்கள் அகற்றம்!
அதிர்ச்சி… 28 வயது மருத்துவர் மாரடைப்பால் உயிரிழப்பு!
இன்று தமிழகம் முழுவதும் 1000 இடங்களில் சிறப்பு முகாம்... கையோட ஆதார் எடுத்துட்டு போங்க!
குட்நியூஸ்... எஸ்பிஐ வங்கியில் 8,283 காலிப்பணியிடங்கள்; உடனே விண்ணப்பியுங்கள்!