உறுப்பு தானம் செய்தால் இறுதிச்சடங்கில் அரசு மரியாதை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

தங்களது குடும்ப உறுப்பினர் மூளைச்சாவு அடைந்த துயரத்திலும், உறுப்பு தானம் செய்வதில் தமிழகம், நாட்டின் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், உறுப்பு தானம் செய்பவர்களின் உடல்கள் இனி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவரது ட்விட்டர் பக்கத்தில், உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது.

குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரமான சூழ்நிலையிலும், அவர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது.

தன் உறுப்புகளை இழந்து பல உயிர்களை காப்போரின் தியாகத்தை போற்றிடும் வகையில், இறக்கும்முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு, உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே மேலும் அதிகரிக்க செய்யும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in