
தமிழக பொதுவுடமைக் கட்சிகளில் தமிழ்நாட்டு மக்களின் உணர்வைச் சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப செயல்படுகிற, கருத்தை வெளிப்படுத்துகிற கட்சி என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சொல்வார்கள். மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் மாநாட்டு பொதுக்கூட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசனின் பேச்சுக்கு கிடைத்த வரவேற்பு அதை மெய்ப்பித்தது. பரபரப்பான அரசியல் சூழலில் 'காமதேனு' இணைய இதழுக்காக அவருடன் பேசினோம்.
மார்க்சிஸ்ட் மாநாட்டுப் பொதுக்கூட்டத்தில் ஹிட்லரின் முடிவுதான் மோடிக்கும் ஏற்படும் என்ற பொருள்படப் பேசினீர்களே... எந்த அடிப்படையில் அவ்வளவு பெரிய வார்த்தையைப் பயன்படுத்தினீர்கள்?
இலங்கையில் என்ன நடந்ததோ அதுதான் கிட்டத்தட்ட இந்தியாவிலும் நடக்கிறது. 100 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் போராடிப் போராடிப் படிப்படியாக பெற்ற சட்டங்கள், சலுகைகள், உரிமைகளை எல்லாம் ஒரே உத்தரவில் பறிக்கிறார் மோடி. விவசாயிகளின் கருத்தைக் கேட்காமல், எதிர்கட்சிகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் 3 வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்ததுடன் நில்லாமல், 5 மாநிலத் தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அதைக்கொண்டுவர முயற்சிக்கிறார்.
அரசமைப்புச் சட்டத்தின்படி சுதந்திரமாகச் செயல்படக்கூடிய அமைப்புகளான தேர்தல் ஆணையம், நீதிமன்றம் போன்றவற்றையும் தன்னுடைய கைப்பாவையாக்கி ஆட்டுவிக்கிறார். ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் தயாராக இருப்பதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சொல்லவைக்கப்படுகிறார். சாதாரண குடிமகன்களின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றங்களின் நம்பகத்தன்மையும்கூட கேள்விக்குறி ஆக்கப்பட்டிருக்கிறது.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ராணுவத் தளபதிகளை உடனடியாக ஆளுநர்களாக, ராஜ்யசபா எம்பி-க்களாக, அமைச்சர்களாக நியமிப்பது என்ற மோடியின் செயல்பாடுகள் எல்லாமே பாசிஸ்ட்தனமாக இருக்கிறது. எனவேதான் சொன்னேன், சர்வாதிகாரியாக செயல்பட்ட ஹிட்லர் கடைசியில் தற்கொலை செய்துகொண்டு இறந்தார். அவரைப்போல் செயல்படும் பிரதமர் மோடிக்கு அவரது நிலை ஏற்பட்டால் நம் நாட்டிற்குத்தான் தலைகுனிவு ஏற்படும் என்று. அதன் பொருள் அப்படி நடந்துவிடக்கூடாது என்று எச்சரிப்பதுதானே ஒழிய, அப்படித்தான் நடக்க வேண்டும் என்பதல்ல.
பாஜக தங்கள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆர்எஸ்எஸின் அஜண்டாவை நிறைவேற்றுகிறது என்கிறீர்கள். திமுக மட்டும் திகவின் கொள்கைகளை, லட்சியங்களை சட்டங்களாகவும், திட்டங்களாகவும் கொண்டுவரவில்லையா?
(குறுக்கிடுகிறார்) இந்த ஒப்பீடே தவறு. மனுதர்மத்தையும், பெரியாரின் கொள்கைகளையும் எப்படி ஒன்றாகக் கருத முடியும்? மூடப்பழக்க வழக்கங்களும், சாதிய ஏற்றத் தாழ்வுகளும் ஒழிக்கப்பட வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை. சாதிக்கொரு நீதியும், ஏற்றத்தாழ்வுகளும் அப்படியே தொடர வேண்டும் என்பது மனுதர்மக் கொள்கை. கம்யூனிஸ்ட்களும் சரி, திமுகவும் சரி, எங்களுடைய கொள்கை இதுதான் என்று பகிரங்கமாகப் பேசி, மக்களின் ஆதரவைப் பெற்று ஆட்சி அதிகாரத்துக்கு வந்த கட்சிகள்.
உலகத்திலேயே சொந்தக் கொள்கையை வெளியே சொல்லவே அசிங்கப்படும் ஒரு கட்சி இருக்கிறதென்றால் அது பாஜகதான். பிரச்சாரத்தின்போது வேறொன்றைச் சொல்லிவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் ஆர்எஸ்எஸ்-சின் மறைமுக அஜண்டாவை நிறைவேற்றுவதால்தான் அதை விமர்சிக்கிறோம்.
பெரியாரின் கொள்கையை 21 மொழிகளில் கொண்டுசெல்வதா என்று கேட்கிற பாஜகவினர், தாராளமாக மனுதர்ம சாஸ்திரத்தை உலக மொழிகளில் எல்லாம் வெளியிடட்டும். அதையும் மத்திய அரசின் நிதியிலேயேகூட செய்யட்டும். ஒரே ஒரு நிபந்தனை, அதில் உள்ளபடி மொழிபெயர்க்க வேண்டும். அதை வெளியிட்டுவிட்டு இதுதான் எங்கள் கொள்கை, இப்படித்தான் எங்கள் ஆட்சி இருக்கும் என்று வெளிப்படையாக அவர்கள் சொல்லட்டும் பார்க்கலாம். அடுத்த நாளே அந்த ஆட்சியும் இருக்காது; கட்சியும் இருக்காது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.