தஞ்சை வேளாண்மை கல்லூரிக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் - முதல்வர் அறிவிப்பு

எம்.எஸ்.சுவாமிநாதன்
எம்.எஸ்.சுவாமிநாதன்

எம்.எஸ்.சுவாமிநாதன் நினைவை போற்றும் வகையில், தஞ்சாவூரில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கு எம்.எஸ்.சுவாமிநாதன் பெயர் சூட்டப்படும் என பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு பேசினார். ‘’இந்திய ஒன்றியம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறவும், இந்திய மக்களின் பட்டினி சாவை தடுக்கவும் 1960களில் பசுமை புரட்சியை செயல்படுத்தியவருமான எம்.எஸ்.சுவாமிநாதனின் அளப்பறிய பணிகளை நினைவுகூறும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிடுவதில் பெருமைபடுகிறேன்.

வேட்டை சமூகமாக இருந்த மனித இனம் வேளாண் தொழிலை தேர்வு செய்தது என்பது மனித இனத்தின் பரிணாம வளர்ச்சி என்பதுடன் அறிவியலின் வளர்ச்சியும் ஆகும். பல்வேறு ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நிகழ்த்தி காட்டியவர் எம்.எல்.சுவாமிநாதன். கலைஞர் ஆட்சியில் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி மையங்கள் நிருவப்பட்டு உணவு உற்பத்தியில் புரட்சியும் அனைவருக்கும் பங்களிப்பதற்கான செயல்முறை திட்டமும் பங்களிக்கப்பட்டது.

இன்றளவும் இந்தியாவில் வெற்றிகரமாக மாடலாக இருப்பது முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மாடல்தான். இந்த பங்களிப்பில் அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் ஆலோசனைகளும் இணைந்து உள்ளன. காலநிலை மாற்றம் இன்று பெரிய பிரச்சினையாக உள்ளது. காலநிலை மாற்றம் குறித்து 1969ம் ஆண்டிலேயே இந்திய அறிவியல் மாநாட்டில் பேசி உள்ளார். கலைஞர் மீது அளப்பறிய அன்பு கொண்டவரான எம்.எஸ்.சுவாமிநாதன் மிக உருக்கமான இரங்கல் குறிப்பையும் பதிவு செய்திருந்தார்.

தனது பெயரிலான எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு கலைஞர் நிலம் தந்து உதவியதையும், ஜே.ஆர்.டி டாடா பெயரிலான சுற்றுசூழல் தொழில்நுட்ப மையத்தை குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் உடன் இணைந்து தலைவர் கலைஞர் திறந்து வைத்ததையும் நன்றி பெருக்குடன் பதிவு செய்துள்ளார். தமிழ்நாட்டுக்கான உயிரி தொழில்நுட்ப கொள்கையை உருவாக்கியவரும் கலைஞர்தான் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

2021ல் எம்.எஸ்.சுவாமிநாதன் பன்னாட்டு ஆராய்ச்சி மையத்தில் நடந்த கருத்தரங்கை தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தபோது அவரது பணிகளை பாராட்டி பேசினேன். பசுமை புரட்சியின் தந்தை என போற்றப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் 28-9-2023 அன்று மறைவெய்தியபோது அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன் அரசின் சார்பில் இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

அவரின் நினைவை போற்றும் வண்ணம் தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி இனி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் என்று அழைக்கப்படும். 

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளம் வேளாண் அறிவியல் பயிர்பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்று முன்னிலை பெறும் மாணவருக்கு டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்’’ என கூறினார்.

முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in