ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து... உட்கார்ந்தே இருந்த நிதின் கட்கரி: கொந்தளிக்கும் அமைச்சர்

ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து... உட்கார்ந்தே இருந்த நிதின் கட்கரி: கொந்தளிக்கும் அமைச்சர்

பிரதமர் பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்காதது ஏன் என்பது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கம் அளிக்க வேண்டும் என அமைச்சர் மனோ தங்கராஜ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்த விழாவில் காணொலி வாயிலாக இணைந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது, எழுந்து நிற்காமல் சேரில் உட்கார்ந்து இருந்தார். இது தற்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், கடந்த 2018-ம் ஆண்டு ஐ.ஐ.டி.-யில் நடந்த விழாவின் போது தமிழ்த்தாய் வாழ்த்தை நிதின் கட்கரி புறக்கணித்ததாகவும் இதனால், தற்போது அமைச்சர் எழுந்து நிற்காதது எதேச்சையாக நடந்ததாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

இதன்மூலம் தமிழ்நாட்டு மக்களை மத்திய அமைச்சர் அவமதித்து விட்டதாக கூறியுள்ள மனோ தங்கராஜ், இது குறித்து நிதின் கட்கரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in