சந்திரபாபுவை விடுவிக்க கோரிக்கை! டெல்லியில் தெலுங்கு தேசம் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம்

தெலுங்கு தேசம் கட்சியினர் டெல்லியில் உண்ணாவிரத போராட்டம்
தெலுங்கு தேசம் கட்சியினர் டெல்லியில் உண்ணாவிரத போராட்டம்

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை விடுவிக்க கோரி இன்று டெல்லியில் அக்கட்சியினர், பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திறன் மேம்பாட்டு குழு ஊழல் தொடர்பாக பதிவான வழக்கில், ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அக்கட்சியினர் ஆந்திரா மட்டுமின்றி டெல்லி உள்ளிட்ட மாநிலங்களிலும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அக்கட்சியின் மகளிர் அணியினர் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திய நிலையில், சித்தூரில் அக்கட்சியினர் பிரம்மாண்ட பேரணியும் நடத்தினர்.

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட போது (கோப்பு படம்)
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்ட போது (கோப்பு படம்)

இதனிடையே நாளை ஊழல் வழக்கு தொடர்பாக ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக்கோரியும், உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்துள்ள மனு விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில், கட்சியின் அறிவிப்புப்படி, டெல்லியில் இன்று தெலுங்கு தேசம் கட்சியினர் பொதுச்செயலாளர் நாரா லோகேஷ் தலைமையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘நாங்கள் சந்திரபாபு நாயுடுவுடன் உள்ளோம்’ என்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளுடன் ஏராளமான கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in