
நாகா இன மக்களை திமுக அமைப்புச் செயலரான ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தியதாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டிருக்கும் பதிவு, தமிழ்நாட்டின் அடுத்த அரசியல் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது.
இந்தியாவின் வடகிழக்கில் வாழும் நாகா இன மக்களை, திமுகவின் அமைப்புச் செயலரான ஆர்.எஸ்.பாரதி இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டியதோடு, நாகா இன மக்களின் சிறப்புகள் குறித்தும் ராஜ்பவன் சார்பில் ஒரு பதிவு வெளியாகி உள்ளது.
எக்ஸ் தளத்தின் தமிழ்நாடு ராஜ்பவன் கணக்கில் வெளியாகி உள்ள அந்த பதிவில் ”'நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் திரு. ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு. பாரதியை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவுடன் இணைக்கப்பட்ட வீடியோவில் ஆர்.எஸ்.பாரதி மேடை ஒன்றில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக பேசுவது பதிவாகி இருக்கிறது. அந்த வீடியோவில், “இங்கே உட்கார்ந்து இருக்கும் ஆளுநர் நம் ஆட்சிக்கு தொந்தரவு கொடுக்க வேண்டும் என்றே செயல்படுகிறார். எத்தனையோ ஆளுநர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த ஆளுநர் வேண்டுமென்றே வம்புக்கு சண்டைக்கு இழுக்கிறார். நாம் அனுப்புகிற மசோதாக்களை கூட கையெழுத்து போட முடியாது என்கிறார்.
நாகாலாந்தில் இவருக்கு ஏற்பட்ட நிலைமை என்ன தெரியுமா... ஊரைவிட்டே விரட்டி அடித்தார்கள். நாகாலாந்து காரன் நாய் கறி துன்னுவான். நாய்க்கறி தின்பவனுக்கே அவ்வளவு சுரணை இருந்து, இந்த ஆளுநரை ஓட ஓட விரட்டினான் என்றால்... தமிழனுக்கு எவ்வளவு சொரணை இருக்கும். அவரை வெளியே அனுப்பும் நாளில், அங்கே தீபாவளி போல பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்” என்று ஆர்.எஸ்.பாரதி பேசியிருக்கிறார்.
ராஜ்பவனின் ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியான ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பதிவு, தமிழில் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் வெளியாகி இருக்கிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னதாக நாகாலந்தில் பணியாற்றியவர். அந்த வகையில் நாகா மக்களுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் அவர் பதிவிட்டிருப்பது புதிய சர்ச்சைகளை கிளப்ப உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!