திமுக அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்கிறது: ஒரே போடாக போட்ட செல்லூர் கே.ராஜூ!

பூமி பூஜையில் செல்லூர் ராஜூ
பூமி பூஜையில் செல்லூர் ராஜூதிமுக அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்கிறது: ஒரே போடாக போட்ட செல்லூர் கே.ராஜூ!

"கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்குவதில் இந்தியாவுக்கே இந்த அரசு முன்னோடியாக திகழ்கிறது ’’ என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை சோலை அழகுபுரம் பகுதியில் புதியதாக சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, பணியை தொடங்கி வைத்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜல்லிக்கட்டு தீர்ப்பு வரவேற்க கூடியது. சட்ட நுணுக்கங்கள் அறிந்து அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. 

தொகுதி நிதிகளைப் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 10 கோரிக்கைகள் பெறப்பட்டது. தற்போது அந்த கோரிக்கைகள் கிணற்றில் போட்ட கல்லாக உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சொட்டு மதுகூட கிடைக்காது என்று கூறினார்கள். தற்போது தமிழகத்தில் மது ஆறு போல் ஓடுகிறது. 

கள்ளச்சாராயத்திற்கு பலர் உயிரிழந்துள்ளனர். தற்போது குடும்பமே கள்ளச்சாராயம் குடித்தவர் இறக்க வேண்டும் என நினைக்கும் அளவுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில், சாலை விபத்தில் இறப்புக்கு  ரூ. 2 லட்சம், மூன்று லட்சம் கொடுக்கப்படுகிறது. ஆனால், சாராயம் குடித்தவர்களுக்கு வரலாறு காணாத அளவிற்கு ரூ.10 லட்சம் கொடுக்கப்படுகிறது. கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்குவதில் இந்தியாவுக்கே இந்த அரசு முன்னோடியாக திகழ்கிறது.

சாராய வியாபாரிகள் சொத்துக்கள் பறிமுதல் செய்து அந்த சொத்தை விற்று நிதி கொடுத்திருக்கலாம்.  இந்த ஆட்சியில் நிர்வாகம் சரியில்லை என்பதால்தான் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

சித்திரைத் திருவிழாவில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அந்த விழாவில் உயிரிழந்தவர்களுக்கு நிதி வழங்கவில்லை. 

திமுக ஆட்சி காலத்தில் மதுரையை  ஒரு தீவுபோல் மாற்றி விட்டார்கள். திமுகவில் 2 கோடி தொண்டர்களை இணைப்பதாக கூறி நியாய விலைக் கடைகளில் ஆதார் அட்டைகளை வலுக்கட்டாயமாக வாங்குவதாக புகார் எழுந்துள்ளது" என்று தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in