‘நாம் தமிழர் கட்சியின் கோரிக்கையை நிறைவேற்ற முனைந்த அரசுக்கு வாழ்த்துகள்’

சீமான்
சீமான்

’தமிழகத்தில் அரசுப்பணிகளுக்கு தமிழ் அறிந்திருப்பது கட்டாயம் என்பதை நடைமுறையில் சாத்தியப்படுத்த வேண்டும்’ என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும்போதே தமிழ் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டுமென, சட்டப் பேரவையில் தமிழக அரசு புதிய சட்டத்திருத்த வரைவை கொண்டுவந்து நிறைவேற்றியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தாமதமான நடவடிக்கை என்றாலும், நாம் தமிழர் கட்சியின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்ற முனைந்த தமிழக அரசுக்கு வாழ்த்துகள்.

சட்ட வரைவை நிறைவேற்றியதுடன் நின்றுவிடாமல், முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை தொடர்ந்து ஆய்ந்தறிந்து, நடைமுறையில் சாத்தியப்படுத்துவதை தமிழக அரசு உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்’

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in