‘தமிழக அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது...’ - பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் குறித்து சசிகலா வேண்டுகோள்

சசிகலா
சசிகலா

தமிழகத்தில் பொது மக்களை அச்சுறுத்தும் விதத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்

தமிழகத்தில் அதிகரித்துவரும் பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் குறித்து ட்வீட் வெளியிட்டுள்ள சசிகலா, “தமிழகத்தில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீசி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கடந்த இரு தினங்களாக 17 இடங்களில் இதுபோன்ற தாக்குதல்களை செய்திருப்பதாக வரும் செய்திகள் கவலை அளிக்கிறது. தமிழக அரசு இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்காமல், பொது மக்களை அச்சுறுத்தும் விதத்தில் சட்டத்திற்கு புறம்பான செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுத்து, தமிழக மக்களுக்கு உரிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in