`உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஈபிஎஸ் அணியினருக்கு பாடமாக அமைந்துள்ளது'- ஓபிஎஸ் அறிக்கை

ஈபிஎஸ் - ஓபிஎஸ்
ஈபிஎஸ் - ஓபிஎஸ்உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஈபிஎஸ் அணியினருக்கு பாடமாக அமைந்துள்ளது - ஓபிஎஸ் அறிக்கை

’’ தன்னை ஒருங்கிணைப்பாளர் இல்லை என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு உச்சநீதிமன்றத்தின் உத்தரவு பாடமாக அமைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச் செயலாளர் பதவியை தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை’’ என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’உச்சநீதிமன்ற தீர்ப்பை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கோரிக்கைகளை மக்கள் முன் எடுத்து சொன்னோமோ அவற்றையெல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்ற முறையில் அதற்கு கையெழுத்திட தாயார் என்று அறிவித்தேன். அதற்கு ஏற்ப உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

இரட்டை இலை சின்னம் முடக்க காரணமாக இருக்கமாட்டேன் என ஏற்கெனவே அறிவித்திருந்தது போல அதிமுக போட்டியிட அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பொது வேட்பாளரை நிறுத்தினால் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கையெழுத்துப் போட நான் தயாராகவே இருந்தேன்.

ஆனால் ஒருங்கிணைப்பாளர் கட்சியில் இல்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பகை உணர்வோடு கூறி வந்தனர். இந்த நிலையில் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் உள்ளடக்கிய எங்களை கருத்துக்களையும் கேட்டுத்தான் பொது வேட்பாளரை அறிவிக்க வேண்டுமென உச்ச நீதிமன்ற அளித்துள்ள தீர்ப்பு எங்களை எதிர்த்தவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்கிற என்னுடைய பொறுப்பு நீடிப்பதற்கு எந்த தடையும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் விதிக்கப்படவில்லை. ஆனால் அதேநேரத்தில் சச்சரவுக்கு உள்ளான பொதுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பொறுப்பை உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை.

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை இரட்டை இலை சின்னம் வெற்றிப் பெற நானும் என்மீது பற்றுக்கொண்ட அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் வெற்றிக்கு பாடுபடுவோம்’’ என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in