அருணாச்சலப் பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை தேதி திடீர் மாற்றம்... ஜூன் 2ம் தேதியே முடிவு தெரியும்!

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

அருணாசலப் பிரதேசம், சிக்கிமில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில் ஜூன் 2 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் 18வது மக்களவையை தேர்வு செய்வதற்கான தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. வருகிற ஜூன் 4ம் தேதி ஒரே கட்டமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்

அந்த வகையில் முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 19ம் தேதி துவங்க உள்ளது. ஏப்ரல் 26ம் தேதி 2ம் கட்டமும், மே 7ம் தேதி 3வது கட்டமும், மே 13ம் தேதி 4வது கட்டமும், மே 20ம் தேதி 5வது கட்டமும், மே 25ம் தேதி 6வது கட்டமும், ஜூன் 1ம் தேதி 7வது கட்டமும் தேர்தல் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலுடன் அருணாசலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா, ஆந்திரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. மக்களவை மற்றும் 4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கு பதிவான வாக்குகள் வரும் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2 நாட்கள் முன்பே அதாவது ஜூன் 2 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் இன்று திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை
தேர்தல் வாக்கு எண்ணிக்கை

அருணாசலப் பிரதேசம் மற்றும் சிக்கிமில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி மக்களவைக்கும், சட்டபேபேரவைக்கும் சேர்த்து ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலம் ஜூன் 2 ஆம் தேதி முடிவடைகிறது. எனவே, தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் தேதி ஜூன் 4 ஆம் தேதியில் இருந்து 2 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டப்பேரவைகளின் பதவிகாலம் முடியும் முன்பே தேர்தல் நடத்தி முடிக்கப்படவேண்டும் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

முன்னதாக நேற்று முதலில் தமிழ்நாட்டின் திருக்கோவிலூர் தொகுதிக்கும் தேர்தலை அறிவித்து பின்னர் மாற்றியது தேர்தல் ஆணையம். அதுபோலவே இப்போது அருணாச்சல், சிக்கிம் சட்டப்பேரவை வாக்கு எண்ணிக்கை தேதியையும் மாற்றியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in