தமிழக பாஜக பணிகள் எதுவும் செய்வதே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிதமிழக பாஜக பணிகள் எதுவும் செய்வதே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி குற்றச்சாட்டு

இந்தியாவில் வேறு மாநிலங்களில் உள்ளது போல, தமிழக பாஜக பணிகள் எதுவும் செய்வதில்லை என்று கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்," இந்தியாவில் வேறு மாநிலங்களைப் போல் தமிழக பாஜக பணிகள் எதுவும் செய்வதில்லை. திமுக, அதிமுக என கூட்டணி வைத்து அக்கட்சி அரசியல் செய்யக்கூடாது. பாஜக தனியாக நிற்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட்டால் தான் பாஜக வளர்வதாக அர்த்தம்.

திமுக கொள்கை வழியாக எதுவும் செய்யவில்லை. நாட்டைப் பிரிக்க வேண்டும் என பேசிக்கொண்டே இருக்கும். ஆனால் தேர்தல் வரும் போது வேறு மாதிரியாக அக்கட்சியினர் பேசுவார்கள். தமிழ்நாட்டில் ஒரு முறை ஆட்சியைக் கலைத்தேன். அப்போது ரத்த ஆறு ஒடும் என்றார்கள். ஆனால் பூனைக்குட்டி கூட வெளியே வரவில்லை.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர், மீண்டும் மோடி பிரதமராக வருவார் என்பதை எப்படி சொல்ல முடியும்? பிரதமர் வேட்பாளராக மோடியை கட்சி தலைமை அறிவிக்க வேண்டும். இதுவரை அப்படி எதுவும் முடிவாகவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுடன் இணைந்தால், ஏற்கெனவே இருக்கின்ற வாய்ப்பையும் ராகுல்காந்தி இழந்து விடுவார்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in