திமுக பெண் கவுன்சிலர், கணவருடன் கைது: நீதிமன்றத்தில் போலி ஆவணம் கொடுத்து சிக்கினர்

திமுக கவுன்சிலர் விமலா
திமுக கவுன்சிலர் விமலா

நீதிமன்றத்தில் போலி ஆவணங்களை சமர்பித்த திமுக பெண் கவுன்சிலர், அவரது கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினாவில் தொழிலதிபரைக் கடத்தி நில அபகரித்த வழக்கில் திமுக பெண் கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமறைவாக இருந்து வந்தனர்.. இந்த நிலையில் இன்று இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கிடைத்துவிட்டதாக கூறி, அதற்கான ஆவணங்களை சமர்பிக்க எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

அப்போது முன் ஜாமீன் வழங்கிய ஆர்டரை மாஜிஸ்திரேட் சரிபார்த்த போது, முன் ஜாமீன் வழங்கியதாக சமர்பிக்கப்பட்ட அனைத்து ஆவணங்களும் போலியானது தெரியவந்தது. இதனையடுத்து மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் போலி ஆவணங்களை சமர்பித்த திமுக கவுன்சிலர் விமலா மற்றும் அவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரை எழும்பூர் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in