`அன்றே கலைஞரிடம் சொன்னேன்'- திமுகவிலிருந்து விலகியது குறித்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விளக்கம்

`அன்றே கலைஞரிடம் சொன்னேன்'- திமுகவிலிருந்து விலகியது குறித்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விளக்கம்

திமுக துணை பொதுச்செயலாளராக இருந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியிலிருந்து விலகிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விலகல் அறிக்கையில், "2009ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்குப் பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டுமே மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவரிடமே தெரிவித்துவிட்டேன். தலைவர் கலைஞர் மறைவுக்கு பின் அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று தலைவர் தளபதி முதலமைச்சர் ஆக பொறுப்பேற்று அரசு பணிகளையும் கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மனநிறைவை தருகிறது. இந்த நிறைவோடு அரசிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி அன்று பதவியில் இருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்" என்று கூறியுள்ளார்.

2021-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தனது மனைவி தோல்விக்கு அமைச்சர் முத்துசாமிதான் காரணம் என்று சுப்புலட்சுமி ஜெகதீசனின் கணவர் ஜெகதீசன் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வந்தார். அண்மையில் விருதுநகரில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்காமல் புறக்கணித்தார். தொடர்ந்து திமுக தலைமை மீது அவர் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் இந்த விலகல் முடிவை எடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in