அனுமதியின்றி பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!

அமைச்சர் மனோ தங்கராஜ்
அமைச்சர் மனோ தங்கராஜ்அனுமதியின்றி பால் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை: அமைச்சர் மனோ தங்கராஜ் எச்சரிக்கை!

அரசின் அனுமதியின்றி பால் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆவின் நிர்வாகத்தில் நிச்சயம் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையே பாலமாக விளங்குகிறது. ஆவின் நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் கேட்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

ஆவின் நிறுவனத்தினை மேம்படுத்துவதற்கு தடையாக உள்ள சவால்கள் மற்றும் பலவீனங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆவின் தினசரி பால் கையாளும் திறனை 40 லட்சம் லிட்டரில் இருந்து 70 லட்சமாக உயர்த்த இந்த ஆண்டிற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் தண்ணீர் பாட்டில் திட்டம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

ஆவினில் இனி வரும் காலங்களில் உறுதியாக மாற்றத்தை பார்ப்பீர்கள். அரசின் அனுமதியின்றி பால் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தரமற்ற பால் விற்பனை செய்து யாராவது பாதிக்கப்பட்டால் அரசுதான் பதில் சொல்லியாக வேண்டும். அதனால் அனுமதியின்றி பால் விற்பதை தவிர்க்க வேண்டும்’’ என்றார்


Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in