காலியாகிக் கொண்டிருக்கும் அதிமுகவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்: எச்சரிக்கும் நாராயணன் திருப்பதி

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதிகாலியாகிக் கொண்டிருக்கும் அதிமுகவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்: எச்சரிக்கும் நாராயணன் திருப்பதி

எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம். காலியாகிக் கொண்டிருக்கும் அதிமுகவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் நடந்த ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, ’’ அரசியலில் அண்ணாமலை போன்றவர்கள் கத்துக்குட்டி, அவரால் தான் பாஜக அழிந்துக் கொண்டிருக்கிறது’’ என பேசினார். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மரியாதைக்குறைவாக பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

டெபுடேஷனில் அரசியலில் இருப்பது அதிமுக தான் என்பதை கடம்பூர் ராஜு உணர வேண்டும். தமிழகத்தில் லஞ்ச, ஊழலை ஒழித்து கட்டி, நாகரிக அரசியலுக்கான மாற்றத்தை உருவாக்க தான் அண்ணாமலை அவர்களின் அரசியல் பிரவேசம் என்று கடம்பூர் ராஜு போன்ற அரசியல் கத்துக்குட்டிகளுக்கு தெரியாதது வியப்பல்ல.

மேலும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் தான் என்பதையும், நரேந்திர மோடியின் தலைமையில் உள்ள பாஜக அரசுக்கு மாற்றாக கண்ணுக்கெட்டிய காலம் வரையில் எந்த மாற்றமும் நிகழ வாய்ப்பில்லை என்று தெரியாமல் பேசுகிறீர்கள் கடம்பூர் ராஜு.

அண்ணாமலை ஜெயலலிதாவை பெருமைப்படுத்தியே பேசினார் எனபதை கூட புரிந்து கொள்ள முடியாத , ஒரு சிறந்த தலைவரை போல், தான் இருப்பேன் என்று அண்ணாமலை பேசியதில் ஜெயலலிதாவின் உறுதியான தன்மையை உணர்த்தித்தான் என்பதையும் அறிந்து கொள்ள முடியாத ஒன்றும் தெரியாத கத்துக்குட்டி கடம்பூர் ராஜு தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எது பெருமை, எது சிறுமை என்பது கூட புரிந்து கொள்ள முடியாதவர் செய்தி துறை அமைச்சராக எப்படி இருந்தார் என்பது வியப்பளிக்கிறது. கட்சியை அண்ணாமலை காலி செய்து விடுவார் என்று சொல்லும் கடம்பூர் ராஜு, எங்கள் கட்சியை நாங்கள் பார்த்து கொள்கிறோம்.

காலியாகிக் கொண்டிருக்கும் உங்கள் கட்சியை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று எண்ணாதீர்கள். நெருக்கடி நேரங்களில் கை கொடுத்து, தோளோடு தோள் நின்றவர்களை அவதூறு பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள். நாவடக்கத்தோடு அரசியல் செய்ய முயற்சியுங்கள். இல்லையேல் காலம் பதில் சொல்லும் ‘’ என்று கூறியுள்ளார்.

பாஜக தலைவர்களை அதிமுக குறித்து பேசக்கூடாது என அந்த தலைமை அறிவுறுத்தியிருந்த நிலையில், அதிமுகவினர் பொதுக் கூட்ட மேடைகளில் பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்து வருவது கூட்டணியில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in