எம்.பி மேம்பாட்டு நிதிக்காக மாநில அரசும்  1 கோடி ஒதுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

எம்.பி மேம்பாட்டு நிதிக்காக மாநில அரசும் 1 கோடி ஒதுக்க வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டிற்காக மாநில அரசும் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது ஆய்வு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகையில், "கழிவுநீர் தொட்டிகளில் இறங்கி சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழப்பதைத் தடுக்க சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் தயாரித்துள்ள கருவியை வாங்க வேண்டும். இதற்காக மாநகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கு தலா 20 லட்ச ரூபாய் வழங்க வேண்டும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு மாநில அரசும் நிதி வழங்க வேண்டும் . தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பட்டியல் சமூக மக்கள் வசிக்கக்கூடிய பகுதிகள் சேரி என அழைக்கப்பட்டு வருகிறது அந்த பகுதிகளுக்கு அம்பேத்கர் மற்றும் பெரியார் பெயர்களைச் சூட்ட வேண்டும்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் சாலைகளில் இருக்கக்கூடிய சாதிப்பெயர்களை நீக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களில் செயல்படுவது போல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ சேவை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மத்திய அரசு 5 கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்குகிறது. அது போல் மாநில அரசும் ஒரு கோடி ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதி வரவேண்டும் . மேலும், 60 கிலோமீட்டர் இடையிலான சுங்கச்சாவடிகளை நீக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு செய்வதற்கான தனி ஒரு அலுவலகம் அமைக்க வேண்டும் . முதியோருக்கான ஓய்வு தொகை பெறுவதில் புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்திருப்பதன் மூலம் முதியோர்கள் உதவித்தொகை பெறுவது பாதிக்கப்படுகிறது. எனவே,. அதனைத் திரும்ப பெற வேண்டும்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in