`சட்டப்பேரவையில் மிரட்டல் எல்லாம் விடக்கூடாது’ - வேல்முருகனை எச்சரித்த சபாநாயகர்!

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு’சட்டப்பேரவையில் மிரட்டல்லாம் விடக்கூடாது’ - வேல்முருகனை எச்சரித்த சபாநாயகர்!

சட்டப்பேரவையில் கடந்த 3 நாட்களாக தனக்குப் பேச அனுமதி மறுப்பதாகக் கூறி சத்தமிட்ட சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகனை, ‘’இதுபோன்று அவையில் மிரட்டல்விடும் வகையில் பெரிய சத்தமிட்டுப் பேசக்கூடாது’’ எனச் சபாநாயகர் எச்சரித்ததால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டப்பேரவையில் வினா விடை நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பதிலளித்துக் கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், கடந்த 3 நாட்களாக தனக்குப் பேச அனுமதி  மறுக்கப்படுவதாகச்  சத்தமிட்டார்.

இதனால் கடுப்பான சபாநாயகர் அப்பாவு, ’’துணைக் கேள்வி யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதெல்லாம்  நீங்கச் சொல்லக்கூடாது. அது எனக்குத் தெரியும். சத்தத்தை எல்லாம் ரைஸ் பண்ணக்கூடாது. நீங்கப் பேசுவது எதுவுமே அவைக் குறிப்பில் சேர்க்கப்படாது. நான்கு முறை துணைக் கேள்விகள் கேட்கவும், பல முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களில் பேசவும் அனுமதி அளித்துள்ளேன்.

பல உறுப்பினர்களுக்கு அந்த வாய்ப்புகள் கூட வழங்கவில்லை. கட்சி சார்பாகவோ வேறு உள்நோக்கத்துடனோ வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன். பாகுபாடு இல்லாமல் வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. அதனால் பெரிய சத்தம் எல்லாம் அவையில் போடக்கூடாது’’ என எச்சரித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in