போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அமைச்சர் பொன்முடியின் மகன்: எந்த பதவிக்குத் தெரியுமா?

மருத்துவர் அசோக் சிகாமணி
மருத்துவர் அசோக் சிகாமணி

தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் மருத்துவர் அசோக் சிகாமணி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக போட்டியின்றி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த ரூபா, கடந்த 2021 செப்டம்பர் மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின் தலைவர் பதவி நிரப்பப்படாமலே இருந்தது. துணைத்தலைவராக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மகன் மருத்துவர் அசோக் சிகாமணி இருந்து வந்தார். அவர் கடந்த பல ஆண்டுகளாக கிரிக்கெட் சங்கங்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்தல் இன்று நடைபெறுவதாக இருந்தது. தலைவர் பதவிக்கான போட்டியில் அசோக் சிகாமணி, பிரபு ஆகியோர் இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் பிரபு தனது மனுவை வாபஸ் பெற்றார். இதையடுத்து அசோக் சிகாமணி போட்டியின்றி தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக தேர்வாகியுள்ளார். இதேபோல் கிரிக்கெட் சங்க செயலாளராக பழனி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in