“முட்டி போட்டு முதல்வரானவரெல்லாம் மீண்டும் முதல்வராக முடியாது” - செந்தில் பாலாஜி விளாசல்!

“முட்டி போட்டு முதல்வரானவரெல்லாம் மீண்டும் முதல்வராக முடியாது” - செந்தில் பாலாஜி விளாசல்!

“முட்டி போட்டு முதல்வரானவர்களெல்லாம் மக்கள் வாக்களித்து முதல்வர் ஆகி விடலாம் என்று பகல் கனவு காண்கின்றனர். இன்னும் நூறு ஆண்டுக் காலம் தமிழகத்தை ஆளப்போவது திமுகதான்” அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கரூர் மாவட்ட திமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு முதல்முறையாகக் கரூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருவதையொட்டி அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளிக்க வேண்டும். முதல்வர் வரும் வழியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வரவேற்பளிக்க வேண்டும்.

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களிலும் திமுக வெற்றி பெற்றால், அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் சக்தியாக ஸ்டாலின் இருப்பார். எதிர்முகாமைச் சேர்ந்த ஒரு மணி, திமுக ஆட்சிக்கு மக்கள் மணி அடிப்பார்கள் என்று பேசியுள்ளார். அதிமுகவைச் சேர்ந்த ‘கிரிப்டோ’ மணியாக இருந்தாலும் சரி, வேறெந்த மணியாக இருந்தாலும் சரி கறந்த பால் ஒருபோதும் மடி புகாது. அதுபோல முட்டி போட்டு முதல்வரானவர்கள் எல்லாம் மக்கள் வாக்களித்தால் முதல்வர் ஆகி விடலாம் எனப் பகல் பகல் கனவு காண்கின்றனர். இன்னும் நூறு ஆண்டுக் காலம் தமிழகத்தை ஆளப்போவது திமுகதான்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in