கண்டா வரச்சொல்லுங்க: தமிழக நிதியமைச்சரை கலாய்த்த செல்லூர் ராஜூ!

கண்டா வரச்சொல்லுங்க: தமிழக நிதியமைச்சரை கலாய்த்த செல்லூர் ராஜூ!

தமிழகத்திற்கு உண்மையான விடியல் வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும். அவர் முதல்வரானால் தமிழகத்தில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அச்சம்பத்து - புதுக்குளம் பகுதியில் தொகுதி மேம்பாடு நிதியில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜூ பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய கட்சியாக இருந்தாலும், மாநில கட்சியாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி, அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை ஏற்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை.

அதிமுக தலைமையின் கீழ் எந்தெந்த கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்வோம். மக்களை ஏமாற்றும் நோக்கில் பல பொய்யான தேர்தல் அறிவிப்புகளை வழங்கி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. திமுகவுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள்" என்றார்.

தொடர்ந்து, " ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றம் சாட்டுகிறார். நிதியமைச்சரை முதலில் தனது தொகுதிக்கு வரச் சொல்லுங்கள். தொகுதி மக்களைச் சந்திக்கச் சொல்லுங்கள். அப்போது, தான் களத்தில் என்ன பிரச்சினை உள்ளது என்பது தெரிய வரும். கமிஷன் பெறுவதற்காக மாநகராட்சி பணிகளை நிதி அமைச்சர் நிறுத்தி வைப்பதாக திமுகவினரே குற்றம் சாட்டுகின்றனர்" என்றார்.

மேலும், "திமுக ஆட்சியே விளம்பரத்தால் தான் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. மகளிருக்கான இலவச பேருந்துக்கு முழுமையாக வர்ணம் பூசினால் தான் வயதானவர்களுக்கு தெரியும். முன்பக்கம் மட்டும் வர்ணம் தீட்டினால் எப்படி? எனவே, செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டும். தமிழகத்திற்கு உண்மையான விடியல் வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும். அவர் முதல்வரானால் தமிழகத்தில் நிலவும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும் " என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in