சவுக்கு சங்கரின் சிறைத்தண்டனைக்குத் தடை: எந்த கருத்துக்களையும் தெரிவிக்கக்கூடாது என கோர்ட் உத்தரவு

சவுக்கு சங்கர்.
சவுக்கு சங்கர்.

யூடியூப்பர் சவுக்கு சங்கரின் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. அத்துடன் அடுத்த விசாரணை நடைபெறும் வரை எவ்வித கருத்துகளையும் அவர் தெரிவிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.

தமிழக லஞ்ச ஒழிப்பு துறையில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியும், யூடியூப்பருமான சவுக்கு சங்கர், நீதித்துறையைச் சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை தானாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தது. இவ்வழக்கில் செப்.15-ம் தேதி சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கடலூர் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கவும், ரத்து செய்யக்கோரியும் சவுக்கு சங்கர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, ஜே.கே.மகேஸ்வரி அடங்கிய அமர்வுக்கு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது," நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனைக்கு இடைக்காலத் தடை விதித்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன் அடுத்த விசாரணை வரை அவர் எந்த கருத்துகளையும் தெரிவிக்கக் கூடாது" என்றும் உத்தரவிட்டனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in