முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, அலுவலகத்தில் ரூ.2.16 கோடி ரொக்கம் பறிமுதல்

பறிமுதலான ஆவணங்களின் அடிப்படையில் விசாரிக்க திட்டம்
முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, அலுவலகத்தில் ரூ.2.16 கோடி ரொக்கம் பறிமுதல்
தி இந்து

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி, வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் இன்று காலை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்களிலும், சென்னையில் 14 இடங்களிலும், ஈரோட்டில் 8 இடங்களிலும், சேலத்தில் 4 இடங்களிலும், கோயம்புத்தூரில் 2 இடங்களிலும், கரூர் 2 , கிருஷ்ணகிரியில் , வேலூர், திருப்பூரில் தலா ஒரு இடங்களிலும், பெங்களூருவில் 2 இடங்களிலும், ஆந்திராவில் ஒரு இடம் உட்பட மொத்தம் 69 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது

இந்தச் சோதனையில் ஒரு கிலோ 130 கிராம் தங்கம், 40 கிலோ வெள்ளி மற்றும் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கண்டுபிடித்துள்ளதாகவும், கணக்கில் வராத ரூ.2,16,37,300 கோடி ரொக்கம், செல்போன்கள், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டகச் சாவிகள், கணினி ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் வழக்குக்குத் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தங்கமணி மற்றும் அவர்களது உறவினர்களிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in