
அனைவரும் எதிர்பார்த்தது போலவே 5 மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை அடக்கமாக இருந்த பெட்ரோல், டீசல் விலை இப்போது தினமும் எகிற ஆரம்பித்திருக்கிறது. இதைக் கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் வெடித்தாலும் அதையெல்லாம் சட்டையே செய்யாமல் இருக்கிறது மத்திய அரசு.
மத்திய அரசின் கொள்ளை
மத்திய அரசா விலையை ஏற்றுகிறது... எண்ணெய் நிறுவனங்கள்தானே? என்று கேட்கலாம். 5 மாநிலத் தேர்தலுக்காக தொடர்ந்து 4 மாதமாக உயராத பெட்ரோல் விலை, தேர்தல் முடிந்த பிறகு கடந்த 10 நாட்களாக தினமும் உயர்கிறது என்றால் தடுத்ததும், தடுக்காமல் இருப்பதும் யார் என்பது பாமரர்களுக்கும் தெரியத்தானே செய்யும்?
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளும் முறை அமலானது காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில். எண்ணெய் நிறுவனங்களை நஷ்டத்தில் இருந்து பாதுகாக்க இந்த நடைமுறையை கொண்டுவருவதாகச் சொன்னார்கள் அன்றைய ஆட்சியாளர்கள். ஆனால், நடந்ததோ வேறு. மூச்சுக்கு முந்நூறு முறை காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் ஆட்சியின் தவறுகளையும் விமர்சிக்கும் பாஜக, காங்கிரஸ் போட்ட இந்த தவறான சாலையில் இப்போது இரண்டு கையையும் விட்டபடி ஜாலியாய் வண்டி ஓட்டுகிறது.
2014 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையும் மிகமிக குறைந்திருக்க வேண்டும். ஆனால், பாய்ந்து வந்து அதைத் தடுத்தது பாஜக அரசு. பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி விலை குறையாமல் பார்த்துக்கொண்டது. இதன் மூலம் அநியாயமாக 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் வருமானம் ஈட்டியது மத்திய அரசு.
இதுகுறித்து நிதித்துறையிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதன் சுமை மக்கள் மீது விழுகிறபோது, அதில் இருந்து மக்களைக் காப்பாற்றும் விதமாக இந்த கலால் வரியை மத்திய அரசு குறைக்கும் என்றார்கள். ஆனால், கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டிய பிறகும் ஒரு பைசாகூட வரியைக் குறைக்கவில்லை மத்திய அரசு. மாறாக, தினமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இந்த கட்டுரை எழுதப்பட்ட நாள் கணக்குப்படி, ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு கலால் வரியாக மட்டும் மத்திய அரசு, முறையே 33.00, 24.30 ரூபாய் பறித்துக்கொண்டிருக்கிறது.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.