தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: எடியூரப்பா திடீர் அறிவிப்பு

கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா
கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாதேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: எடியூரப்பா திடீர் அறிவிப்பு

கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா அறிவிப்பு
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக எடியூரப்பா அறிவிப்புதேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன்: எடியூரப்பா திடீர் அறிவிப்பு

கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக இருந்த எடியூரப்பா சட்டமன்றத்தில் இன்று உணர்ச்சிகரமாக உரையாற்றினார். அப்போது அவர், " கர்நாடக மக்களின் சேலையில் நான் ஒவ்வொரு நாளையும் செலவிடுகிறேன். எதிர்கட்சி தலைவராக உள்ள சித்தராமையா மிகச் சிறப்பாக செயல்படுகிறார். ஜனசங்கம் மற்றும் பாஜகவின் செயலாளராக இருந்த காலத்தில் இருந்தே நான் மக்ளுக்கு சேவை செய்து அடிமட்ட மக்களுடன் தொடர்ந்து இணைந்திருக்க முயற்சித்தேன். வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி போன்ற பாஜக தலைவர்களுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்" என்று கூறினார்.

மேலும்," கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன். ஆனால், தீவிர அரசியலில் ஈடுபடுவேன். எனது கடைசி மூச்சு வரை பாஜகவுடன் இணைந்து பணியாற்றுவேன்" என்று எடியூரப்பா கூறினார்.

நடைபெற உள்ள கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று எடியூரப்பா ஏற்கெனவே அறிவித்துள்ளார். கர்நாடகா தேர்தலையொட்டி அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதை இதுவரை பாஜக அறிவிக்கவில்லை. ஆனால், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜேந்திரா தான் என்ற குரல்கள் பாஜகவிற்குள் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தான், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாக எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in