
சமூக நீதி விஷயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்னோடி மாநிலம் தமிழ்நாடு. நீதிக் கட்சி ஆட்சியில் (1927) பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரி அரசாணை (கம்யூனல் ஜி.ஓ.) மூலம் தொடங்கிய இடஒதுக்கீடு, பிறகு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், காமராஜர் ஆகியோரால் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 41 சதவீத இடஒதுக்கீடாக மாறியது. பின்னர் கருணாநிதி ஆட்சியில் அது 49 சதவீதமாகவும், எம்ஜிஆர் ஆட்சியில் 69 சதவீதமாகவும் உயர்ந்தது. பிறகு கருணாநிதி ஆட்சியில் பட்டியலின மக்களுக்கான ஒதுக்கீட்டில் 3 சதவீதம் அருந்ததியருக்கும், பிற்படுத்தப்பட்டோர் ஒதுக்கீட்டில் 3.5 சதவீதம் இஸ்லாமியர்களுக்கும் உள்ஒதுக்கீடாக வழங்கப்பட்டது.
ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கி அவர்களைக் கை தூக்கிவிடுவதற்காக கொண்டுவரப்பட்ட இந்த இடஒதுக்கீடு, சிறப்பாக வேலை செய்திருப்பதை இன்றைய தமிழகத்தின் நிலை காட்டுகிறது. அதே நேரத்தில், 1927-ல் அறிமுகமான இடஒதுக்கீடு அடுத்தடுத்து பல மாற்றங்களைக் கண்டதுபோல, இன்னும் பல மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியதிருப்பதையே கள நிலவரங்கள் காட்டுகின்றன.
We’re glad you’re enjoying this story. Subscribe to any of our plans to continue reading the story.