தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகிலேயே மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டமாகும். இதை பிரதமர் மோடி எவ்வளவுதான் தெளிவுபடுத்தினாலும், அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஏனென்றால் ஊழலின் சாம்பியன் பிரதமர் என்பது ஒட்டுமொத்த தேசத்துக்கும் தெரியும் என்று ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் ஏழு கட்ட நடைபெற உள்ளது.ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி நடைபெறும் இந்த தேர்தலின் ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை இன்று சந்தித்தனர்.
அப்போது," மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வலுவான அடித்தளம் உள்ளது. பாஜக 150 தொகுதிகளுக்குள் அதன் வெற்றி கட்டுப்படுத்தப்படும். தேர்தல் பத்திரங்கள் திட்டம் தான், உலகிலேயே மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டமாகும். இது இந்திய தொழிலதிபர்களுக்கு நன்றாகவே தெரியும். பிரதமர் எவ்வளவுதான் தெளிவுபடுத்தினாலும், அதனால் எந்தப் பாதிப்பும் அவருக்கு ஏற்படாது, ஏனென்றால் ஊழலின் சாம்பியன் பிரதமர் என்பது ஒட்டுமொத்த தேசத்துக்கும் தெரியும். எந்த நேரத்திலும் வறுமையை காங்கிரஸ் ஒழித்து விடும் என்று மோடி விமர்சனம் செய்கிறார்.
வறுமையை ஒரேடியாக ஒழித்து விட முடியும் என்று யாரும் கூறவில்லை. ஆனால், அதற்காக நாம் பலமான முயற்சிகளை மேற்கொள்ள முடியும் என்றார். உத்தரப்பிரதேசத்தின் அமேதி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விகளுக்கு, தனது கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்று பதிலளித்தார் ராகுல்.
" மேற்கு உத்தரப் பிரதேசத்தில் உள்ள காஜியாபாத்தில் இருந்து காஜிபூர் வரை மாற்றத்தின் காற்று வீசத் தொடங்கும். மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு பிரியாவிடை வழங்கப்படும்" என்று அகிலேஷ் யாதவ் கூறினார்.
இதையும் வாசிக்கலாமே...
இந்த 5 தொகுதிகளில் வெற்றி இழுபறி!
தமிழ்நாட்டின் மிகப்பெரிய சந்தைக்கு 2 நாட்கள் விடுமுறை... தேர்தலை முன்னிட்டு அறிவிப்பு!
புதுச்சேரியில் இன்று முதல் 144 தடை உத்தரவு... தேர்தல் ஆணையம் அதிரடி!
தாயைப் பிரிந்த ஏக்கம்... 25 நாட்களாக தவித்த குட்டியானை உயிரை இழந்தது!
நேரிலும், செல்போனிலும் வாலிபர் காதல் டார்ச்சர்.... மனமுடைந்த பள்ளி மாணவி தற்கொலை!