‘மோடி என்ற பெயருடையவர்கள் திருடர்கள்’ என்று பேச்சு: ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை!

ராகுல் காந்தி
ராகுல் காந்தி‘அனைத்து திருடர்களும் மோடியின் பெயரைக் கொண்டுள்ளனர்’ என்று பேச்சு: ராகுல் காந்தியை குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்

மோடியின் பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்திக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. முன்னதாக, மோடி என்ற பெயருடையவர்கள் திருடர்கள் என ராகுல் காந்தி பேசியிருந்தார்.

2019 மக்களவைத் தேர்தலின்போது கர்நாடகாவின் கோலாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில், மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி அப்போதைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த தேர்தல் பிரச்சாரத்தில், ‘எப்படி மோடி என்ற பெயரில் உள்ளவர் எல்லோரும் திருடர்களாக உள்ளனர்’ என்று பொருள்படும் வகையில் அவர் பேசினார்.

இந்த சர்ச்சை பேச்சு தொடர்பாக குஜராத் மாநில பாஜக எம் எல் ஏ புர்னேஷ் மோடி என்பவர், சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக சூரத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் நடந்த விசாரணையில், இரு தரப்பின் இறுதி வாதங்கள் கடந்த வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. ராகுல் காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டைனையையும் விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அவருக்கு பிணையும் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேல்முறையீடு செய்ய காங்கிரஸ் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in