ஆஜரானார் ராகுல் காந்தி... விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை: காங்கிரஸார் குவிந்ததால் பதற்றம்

ஆஜரானார் ராகுல் காந்தி... விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை: காங்கிரஸார் குவிந்ததால் பதற்றம்

நேஷனல் ஹெரால்ட் வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை பங்குகள் சட்டவிரோமாக மாற்றப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதனிடையே, இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு அண்மையில் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில், சோனியா காந்திக்கு திடீரென கரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டுத் தனிமையில் இருந்த அவர், நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, இன்று ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து, அவர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக காங்கிரஸ் தலைமை அலுவலகம் முதல் அமலாக்கத்துறை அலுவலகம் வரை பேரணி நடத்த காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனால், நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக ராகுல் காந்தி ஆஜராகும்போது பேரணி நடத்தபோவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்திருந்தது. அதன்படி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள் பேரணியாக சென்றனர்.

அமலாக்கத்துறை அலுவலகம் வரை சென்ற பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காங்கிரஸ் பிரமுகர்கள், தொண்டர்கள் குவிந்துள்ளால் டெல்லியில் பதற்றம் நிலவி வருகிறது. பாதுகாப்பு பணியில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in