தமிழக ஆளுநர் மாற்றம் குறித்து கேள்வி: கையெடுத்து கும்பிட்ட தமிழிசை

தமிழக ஆளுநர் மாற்றம் குறித்து கேள்வி: கையெடுத்து கும்பிட்ட தமிழிசை

தமிழக ஆளுரை மாற்ற கோரி வைகோ கூறியதாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கையெடுத்து கும்பிட்ட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஜனாதிபதி செய்ய வேண்டிய வேலை என்று கூறிவிட்டு சென்றார்.

நாமக்கல் அடுத்துள்ள கே.புதுப்பாளையம் கிராமத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குலதெய்வக் கோயிலான ஸ்ரீ பாமா ருக்மணி சமேத நந்த கோபால சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஆன்மிக கோயில் நிகழ்ச்சி என்பதால் நான் இங்கு வந்துள்ளேன். உக்ரைனில் வாழும் இந்தியர்கள் மற்றும் மாணவர்களை மீட்பதில் மத்திய அரசு சிறப்பாக பங்காற்றி வந்தது. இது உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணம். அவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வளர்ச்சி திட்டங்கள் அதிகளவில் திட்டப்பட்டுள்ளது" என்றார்.

தமிழக ஆளுரை மாற்ற கோரி வைகோ கூறியதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, கையெடுத்து கும்பிட்டு, ஜனாதிபதி செய்ய வேண்டிய வேலை. இதற்கு பதில் இல்லை என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in