பாதியில் கிளம்பிய நாராயணசாமி; வசமாக சிக்கிய தினேஷ் குண்டு ராவ்: களேபரத்தில் முடிந்த காங்கிரஸ் கூட்டம்!

பாதியில் கிளம்பிய நாராயணசாமி; வசமாக சிக்கிய தினேஷ் குண்டு ராவ்: களேபரத்தில் முடிந்த காங்கிரஸ் கூட்டம்!

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் சென்ற கார் தாக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் சுப்ரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்தில் ஒரு தரப்பினர் மாநில தலைவரின் பதவிக் காலம் முடிந்து விட்டதால் அவரை மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி தகராறு செய்தனர். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூச்சலிட்டு வந்ததால் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பாதியிலேயே கூட்டத்திலிருந்து வெளியேறினார்.

இதனைத்தொடர்ந்து மாநில தலைவரை மாற்ற வலியுறுத்தி நாராயணசாமிக்கு எதிரான தரப்பினர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சூழலில் கூட்டம் முடிந்து கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவைக் காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது, மாநில தலைவர் சுப்பிரமணியன் வாகனத்தில் ஏறிப் புறப்பட முயன்ற மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவைக் கட்சியினர் போக விடாமல் அவரது வாகனத்தை முற்றுகையிட்டனர். மேலும் அவரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in