பிரச்சாரம் எனும் பெயரில் விஷத்தை கக்குகிறார் பிரதமர் மோடி... காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆம் ஆத்மி புகார்!

தமிழக ஆம் ஆத்மி
தமிழக ஆம் ஆத்மி

மத மோதல்களை உண்டாக்கும் வகையில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பரப்புரையில் மதவாதத்தை உண்டாக்கும் வகையில் பேசி வரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆம்ஆத்மி கட்சி சார்பில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தமிழக ஆம் ஆத்மி
தமிழக ஆம் ஆத்மி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வசீகரன், “பிரதமர் மோடி அரசியல் சாசன சட்டதையும், தேர்தல் விதிகளையும் மீறியுள்ளார். பாரத பிரதமராக தலைமை பொறுப்பில் இருப்பவர் மக்களிடையே பிரிவினையை தூண்டும் விதமாக பேசலாமா?.

தமிழக ஆம் ஆத்மி
தமிழக ஆம் ஆத்மி

பரப்புரை என்ற பெயரில் விஷத்தை கக்கியுள்ள மோடியை தேர்தல் ஆணையம் கைது செய்ய வேண்டும். தேர்தலில் பாஜக தோல்வி உறுதி செய்யப்பட்டு விட்டதால் இதுபோன்று இறையாண்மையை பாதிக்கும் வகையில் அவர் பேசி வருகிறார். காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடவுள்ளேன்” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

ராகுல் காந்தியின் ஆண்மையை பரிசோதிக்க தாய், மகள்களை அவருடன் தூங்க அனுப்புங்கள்... காங்கிரஸ் பிரமுகரின் சர்ச்சை பேச்சு!

கைதானவங்க நம்மாளுங்க தான்; ஆனா ரூ.4 கோடி எனதில்லை... நயினார் நாகேந்திரன் விளக்கம்!

அதிர்ச்சி... ஜிஎஸ்டி அலுவலகத்தில் அதிகாரியின் மண்டை உடைப்பு: சென்னையில் பரபரப்பு!

நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு... நாட்டின் கவனம் ஈர்க்கும் நட்சத்திரத் தொகுதிகள் இவைதான்!

முன்பு முதலை, இப்போது சிறுத்தை... படுகாயங்களுடன் உயிர் பிழைத்த முன்னாள் கிரிக்கெட் வீரர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in