
பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “பிரதமர் நரேந்திர மோடி அதானிக்கு பிளாங்க் செக் கொடுத்துள்ளார். நாட்டின் அனைத்து துறைகளிலிருந்தும், ஒவ்வொரு இந்திய குடிமக்களின் வருமானத்திலிருந்தும் அதானி அவர்களுக்கு பங்கு சென்று கொண்டுள்ளது. அதற்கு இந்திய நாட்டின் பிரதமர் மோடி துணையாக இருக்கிறார்.
அதானி குழும நிறுவனத்தின் நிலக்கரி இறக்குமதி முறைகேட்டால் மக்கள் கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்தோனேசியாவில் நிலக்கரியை வாங்கி, இந்தியாவில் அதனை இருமடங்கு விலைக்கு விற்கிறார் அதானி. பிரதமர் மோடி, அதானி குழுமத்தைப் பாதுகாப்பதன் காரணமாகவே இந்த முறைகேடுகள் நடத்துள்ளது. இந்த முறைகேடுகள் குறித்து பிரதமர் இதுவரை வாய்திறக்காதது ஏன்?. அதற்கு பின்னணியில் இருக்கும் சக்தி யார் என்பதை இந்திய நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாளுக்கு நாள் பிரதமர் நரேந்திர மோடி நம்பகத்தன்மையை இழந்து வருகிறார்” என்று கூறினார்
இந்தியாவில் நிலக்கரி ஒதுக்கீடு மற்றும் மின்சார கட்டண உயர்வு ஆகியவற்றின் மூலமாக 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்திருப்பதாகவும், இதன் பின்னணியில் அதானி இருப்பதாகவும் லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் என்ற பத்திரிகை செய்தி வெளியிட்டு இருப்பதாக ராகுல் காந்தி ஆதாரத்துடன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
HBD JYOTHIKA | மறக்க முடியாத நாளும்... மறுத்து... பின் கிடைத்த வாய்ப்பும்!
இந்தியாவைத் தோற்கடிச்சா என் கூட டின்னர் சாப்பிடலாம்... சர்ச்சையைக் கிளப்பிய பிரபல நடிகை!
அதிர்ச்சி... இளம் மல்யுத்த வீராங்கனை தற்கொலை!
வரி ஏய்ப்பு புகார்... தமிழகத்தில் 30 இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு!
சோகம்... எல்லாமே 2000 ரூபாய் நோட்டுக்கள்... 1.50 லட்சத்தை மாற்ற முடியாமல் தவிக்கும் பெண்மணி!