முஸ்லிம்களுக்கு இடமில்லாத வகையில் அரசியலமைப்பை மாற்றுவோம்: தொகாடியாவின் சர்ச்சை பேச்சு வைரல்

முஸ்லிம்களுக்கு இடமில்லாத வகையில் அரசியலமைப்பை மாற்றுவோம்: தொகாடியாவின் சர்ச்சை பேச்சு வைரல்

நாங்கள் ஆட்சியில் இருக்கும் போதே முஸ்லிம்களுக்கு இடமில்லாமல் அரசியலமைப்பை மாற்றி எழுதுவோம் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் முன்னாள் தலைவர் பிரவீன் தொகாடியா பேசிய பேச்சு தற்போது சர்ச்சையாகியுள்ளது. அத்துடன் இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது.

உத்தராகண்ட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சுமார் இரண்டு கோடி இந்து இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்களின் பாதுகாப்பிற்காக திரிசூலங்கள் வழங்குவதை உள்ளடக்கிய 'வீர் ஹிந்து விஜேத ஹிந்து' என்ற திட்டத்தை பிரவீன் தொகாடியா தொடங்கி வைத்தார். இதன் பின் அவர் பேசுகையில், "இந்துக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய அரசியலமைப்பில் முஸ்லிம்களைச் சேர்க்கக்கூடாது.

மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுச் சட்டம் அவசியம் பின்பற்றப்பட வேண்டும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்களுக்கு மானிய விலையில் தானியங்கள் வழங்கப்படக்கூடாது. அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சையோ, பள்ளிகளில் கல்வியோ வழங்கக்கூடாது. அத்துடன் அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க உரிமை இல்லை. அதே போல் வாக்களிக்கும் உரிமையும் இல்லை. இந்த நடவடிக்கைகளைகளை அமல்படுத்தினால், பிற சிறுபான்மை சமூகங்களில், குறிப்பாக முஸ்லிம்களின் மக்கள் தொகையில் கடுமையான குறைவை உறுதி செய்யும்" என்று அவர் பேசினார். அவரது சர்ச்சை பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in